மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
நார்த் அமெரிக்கா பிலிம் அவார்ட்ஸ் (NAFA) என்கிற விருதுகள் வருடந்தோறும் வெளியாகின்ற சிறந்த மலையாள சினிமாவுக்கும், அதில் பங்குபெற்ற சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்களை வட அமெரிக்காவில் வசிக்கும் மலையாளிகள் ஆன்லைன் சர்வே மூலமாக ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தவகையில் இந்த வருட விருதிற்கான நபர்களை தேர்ந்தெடுத்தும் விட்டார்கள்.. நேற்றுமுன் தினம் இந்த விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம் மற்றும் ஆக்சன் ஹீரோ பிஜூ ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் நிவின்பாலியும், கரிங்குன்னம் சிக்சஸ் மற்றும் வேட்ட படங்களுக்காக சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மஞ்சு வாரியாரும் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய மஞ்சு வாரியர், “சமீப நாட்களாக எனக்கு ஏற்பட்டு இருக்கும் மன அழுத்தத்திற்கும், தற்போது நான் நடித்து வரும் ஆமி படத்தின் தொடர் படப்பிடிப்பினாலும் இங்கு வரமுடியுமா என்கிற சந்தேகம் எனக்கே இருந்தது. ஆனால் மறைந்த இயக்குனர் ராஜேஷ் பிள்ளை எனக்கு தந்துவிட்டு போன இந்த கௌரவத்தை பெறவே இவ்வளவு தூரம் வந்துள்ளேன். இங்கே செல்ல எனக்கு அனுமதி தந்த 'ஆமி படத்தின் தயாரிப்பளருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என கூறியுள்ளார்.
இதன்மூலம் அவரது முன்னாள் கணவர் திலீப்பின் கைது மற்றும் தங்களது மகள் மீனாட்சி தற்போது ஆதரவற்று இருக்கும் நிலை ஆகியவை மஞ்சு வாரியாரை பாதித்துள்ளது என்பது அவர் பேச்சிலிருந்தே நன்றாக தெரிகிறது.