அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
இயக்குனர் ராமின் அடுத்த படைப்பாக வெளியாக இருக்கிறது 'தரமணி'. உலகமயமாக்கல் ஆண், பெண் உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தான் தரமணி படத்தின் கதைக்களம். இதுவும் ஒரு அக்மார்க் காதல் கதை தானாம். ஆனால் மற்ற படங்களில் எல்லாம் ஒரு ஆண் தனது பாய்ன்ட் ஆப் வியூவில் இருந்து தனது காதல் கதையை விவரிப்பது தான் வழக்கம். ஆனால் இந்தப்படத்தில் ஆண்ட்ரியாவின் பார்வையில் இருந்து அவரது காதல் கதை விரிகிறதாம். தமிழில் இந்த யுத்தியை பயன்படுத்துவது அனேகமாக இது தான் முதன்முறையாக இருக்கும்..
இதேபோல மூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் 'ஓம் சாந்தி ஒசானா' என்கிற படம் வெளியானது. நிவின்பாலி-நஸ்ரியா ஜோடியாக நடித்திருந்த இந்தப்படம் நஸ்ரியாவின் பாயின்ட் ஆப் வியூவில் கதை நகர்வதாக சொல்லப்பட்டிருந்தது. அதிலும் ஒரு ஆச்சர்யமாக, நிவின்பாலியின் காதலை பெறுவதற்காக படம் முழுவதும் அவர் செய்யும் பிரயத்தனமும் அதை அவரே கதைபோல சொல்வதும் தான் படத்தின் ஹைலைட். மலையாளத்திலும் இந்த யுத்தி நஸ்ரியாவுக்குத்தான் முதன்முதலாக ஒர்க் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.