ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஸ்பைடர் படத்தை அடுத்து கொரட்டல்ல சிவா இயக்கத்தில் பாரத் அனி நேனு என்ற படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அப்படத்தில் மகேஷ்பாபு முதலமைச்சராக நடிக்கும் தகவல் ஏற்கனவே வெளியானது. தற்போது அப்படத்தின் கதை, இன்றைய நிஜ அரசியலை பிரதிபலிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் டைரக்டர் கொரட்டல்ல சிவா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளர்.
பாரத் அனி நேனு படம் முழுக்க முழுக்க அரசியல் கதையில் உருவாகிறது. அதேசமயம், அரசியல்வாதி யாரையும் பிரதிபலிக்கவில்லை. முக்கியமாக முதலமைச்சராக நடிக்கும் மகேஷ்பாபு எந்த முதல்வர்களையும் ரோல்மாடலாக கொண்டு நடிக்கவில்லை. இந்த கற்பனை கதைக்கு ஒரு புதிய வடிவம் கொடுத்திருக்கிறோம். சமூக நோக்கம் கொண்ட ஒரு இளைஞன் முதலமைச்சரானால் என்ன நடக்கும் என்பதுதான் இந்த படம் என்று கூறியுள்ளார்.