ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக நடித்து வந்த டாப்சி, இப்போது முழுக்க முழுக்க பாலிவுட்டே கதி என்று கிடக்கிறார். அவரது நடிப்பில் வெளியான பேபி, நாம் சபானா போன்ற படங்களுக்கு அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன. இப்போது அடுத்தப்படியாக பாலிவுட்டில் பெரிய நடிகர்களுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாப்சி கூறியதாவது... "நடிகைகள், நிச்சயம் பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும். பாலிவுட்டை பொறுத்தமட்டில் கான் நடிகர்களுக்கு தான் மார்க்கெட் வேல்யூ அதிகம். ஆகையால் அவர்களின் படங்களின் நடிக்கும் போதும், அவர்களும் மக்களிடம் கவனிக்கப்படும் நடிகைகளாகி விடலாம்" என்கிறார்.
டாப்சி தற்போது வருண் தவான் இரண்டு வேடங்களில் நடிக்கும் ஜூட்வா 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற செப்., 29ம் தேதி ரிலீஸாக உள்ளது.