பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நடிகர் சாகித் கபூர், தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் பத்மாவதி என்ற படத்தில் மட்டும் தான் நடித்து வருகிறார். இதற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை.
இதுகுறித்து சாகித் கபூர் கூறியதாவது... "பத்மாவதி படத்திற்கு பிறகு எனக்கு வேறு படங்கள் அமையாததால், நிச்சயம் நான் கவலை கொள்ள மாட்டேன். நல்ல படங்களை கொடுக்கவில்லை என்றால் தான் கவலைப்பட வேண்டும். நல்ல படங்களுக்காக காத்திருப்பதில் தவறு ஏதும் கிடையாது. வருகின்ற எல்லா படங்களிலும் நடிப்பதை விட நல்ல கதையம்சம் உள்ள ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி இருக்கிற கதையில் நானும் ஒரு பகுதியாக இருந்தாலே போதும்" என்கிறார்.
பத்மாவதி படத்தில் சாகித் கபூருடன் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இப்படம் இந்தாண்டு நவ., 17-ம் தேதி ரிலீஸாக உள்ளது.