‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
திரையுலகத்தைப் பொறுத்தவரையில் யார் மிகவும் பொறுப்பாக இருக்கிறார்களோ அவர்களை வெற்றி தொடர்ந்து கொண்டேயிருக்கும். பல நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்தில் வந்து தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் பல வருடங்களாக, பல படங்களில் நடித்து வந்தார்கள். இன்றும் சில சீனியர் நடிகர்கள் அதை விடாமல் செய்து கொண்டுதானிருக்கிறார்கள்.
பொதுவாக நடிகைகள்தான் சரியான நேரத்தில் வர மாட்டார்கள் என்று சொல்வார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ளும் நடிகைகளில் சமந்தா முதன்மையானவர் என அவரைப் பாராட்டுகிறார்கள். படப்பிடிப்பு அந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பாராம் அவர்.
வரும் அக்டோபர் மாதம் அவருக்கும் நடிகர் நாக சைதன்யாவிற்கும் திருமணம் நடக்க உள்ளது. சாதாரண ஜோடிகளே திருமணம் முடிந்ததும் தேனிலவைக் கொண்டாட இப்போது வெளிநாடு பறக்கிறார்ககள். நட்சத்திர ஜோடி என்றால் கேட்கவா வேண்டும். ஆனால், நாகசைதன்யாவும், சமந்தாவும் உடனடியாக எந்த வெளிநாட்டிற்கும் பறக்கப் போவதில்லையாம். திருமணம் முடிந்த மூன்றாவது நாளிலேயே சமந்தா படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என டோலிவுட்டில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.
சிவகார்த்திகேயன் நடிக்கும் தமிழ்ப் படத்திலும், 'ரங்கஸ்தலம்' தெலுங்குப் படத்திலும் திருமணம் முடிந்ததும் அவர் கலந்து கொள்ள உள்ளாராம். திட்டமிட்டபடி அந்தப் படங்களை முடிக்க வேண்டும் என்பதால் தான் தனது திருமண விடுமுறையையும் 'கட்' செய்துவிட்டாராம் சமந்தா.