'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு |
அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் என நடிகர் கமல் கூறியுள்ளார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு எதிராக அமைச்சர்கள் அன்பழகன், ஜெயக்குமார், சண்முகம் மற்றும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பா.ஜ., தலைவர்களும் கமல்ஹாசனை விமர்சித்து உள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்க மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கண்டன போஸ்டர்களை ரசிகர்கள் ஒட்டி வருகின்றனர். மதுரை நகரிலும் கமல் ரசிகர் மன்ற சுவரொட்டிகள் ஒட்பப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும். நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே ரசிகர்கள் தேவை. அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.