ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் திலீப், நடிகை விவகாரத்தில் சிறைக்கு சென்று பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. திலீப்பிற்கு வேண்டிய ஒருசிலர் மட்டும் அவரை சிறையில் வந்து சந்தித்துவிட்டு செல்கிறார்கள்.. ஆனால் திலீப்பின் அம்மா, மனைவி காவ்யா மாதவன், மகள் மீனாட்சி ஆகியோர் இதுநாள்வரை திலீப்பை சிறையில் வந்து சந்திக்கவே இல்லை.. காவ்யா மாதவனை பொறுத்தவரை போலீஸார் அவர் மீதும் சந்தேக கண் வைத்திருப்பதை உணர்ந்ததாலும், மேலும் சிறைக்கு கணவரை சந்திக்க வரும் விஷயம் அறிந்து பறந்துவரும் மீடியாக்களின் பார்வைக்கும் கேள்விக்கும் ஆளாகிவிட கூடாது என்றும் சிறைக்கு வந்து திலீப்பை பார்ப்பதை தவிர்த்து விட்டாராம்.
அதேசமயம் திலீப்பின் மகள் மீனாட்சி, திலீப் கைதான அன்றே இங்கிருந்து துபாயில் உள்ள திலீப்பின் நெருங்கிய உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது மகள், மனைவி, அம்மா ஆகியோருடன் பேசுவதற்கு வசதியாக, திலீப் சிறையில் உள்ள ஒரு ரூபாய் காயின் போனை பயன்படுத்திக்கொள்ளலாம் என சிறை நிர்வாகம் அனுமதித்துள்ளதாம். சிறையில் திலீப்பிற்கு பேப்பர் படிக்கும் வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும் அவர் நாளிதழ்கள் எதையும் வாசிப்பதில்லையாம். படித்தால் அதில் உள்ள தன்னைப்பற்றிய செய்திகள் மனதை காயப்படுத்துகின்றன என்பதால் படிப்பதில்லை என்கிறாராம் திலீப்.