தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாக ஆளும் அதிமுக அரசை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். எல்லா துறைகளிலும் லஞ்சம் விளையாடுகிறது. நீட் தேர்வு, டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியாவிட்டால் பதவி விலகுங்கள். நான் முடிவெடுத்தால் நான்தான் முதல்வர் என அதிரடியாக பேசியும், எழுதியும் வருகிறார். இது ஆளும் அதிமுக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் கடும் கோபத்தை உருவாக்கியது. அவர்கள் கமல்ஹாசனை ஒருமையில் விளித்து கடுமையாக தாக்கி பேசினார்கள். ஊழலை நிரூபியுங்கள் என்றார்கள். இதனால் கமல் தன் ரசிகர்களையும், பொதுமக்களையும் ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த துறை அமைச்சருக்கு புகார் அனுப்புங்கள் என்றார்.
இதனால் அமைச்சர்களின் இணையதள முகரிவகள் அழிக்கப்பட்டது. தொடர்ந்து கமல் ஊழல் தடுப்பு பிரிவுக்கு அனுப்புங்கள் என்று அந்த முகவரியைக் கொடுத்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கமல் அரசியலுக்கு வரட்டும் அப்போது பதிலடி கொடுப்போம் என்று கூறியிருக்கிறார். அமைச்சர்களும் கமலின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் இரு தரப்புக்கும் கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசன் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் தலைமையில் குறைந்தது பத்து போலீசார் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல கமல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வரும் தொலைக்காட்சியின் அலுவலகத்திற்கும், கமலின் கிழக்கு கடற்கரை சாலை வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கமல் போலீஸ் பாதுகாப்பு கேட்டு யாரிடமும் விண்ணப்பிக்கவில்லை என்று அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.