வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய அனாமிகா படத்தில் நடித்தபோது அந்த படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நயன்தாரா பங்கேற்கவில்லை. அதனால் அவர் மீது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். அதையடுத்து நயன்தாராவுக்கு தெலுங்கு படங்களில் ஓராண்டு ரெட் கார்டு போடப் பட்டது. அதன் பின்னர் தமிழ், மலையாளப் படங்களில் மட்டுமே நடித்து வந்த நயன்தாரா, தற்போது மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து அவர் நடித்த புதிய நியமம் என்ற படம் தற்போது தெலுங்கில் வாசுகி என்ற பெயரில் ரிமேக்காகி வருகிறது. இந்த படம் போதைக்கு அடிமையான ஒரு பெண்ணை சிலர் பலாத்காரம் செய்து விடுவதும், பின்னர் அவர்களை அந்த பெண் பழிவாங்குவது போன்ற கதையில் உருவாகியிருக்கிறது.
தற்போது தெலுங்கு சினிமாத்துறையில் போதை பொருள் விவகாரம் சூடுபிடித்திருப்பதால், நயன்தாராவின் வாசுகி பட வட்டாரம் பரபரப்படைந்திருக்கிறது. அதோடு தற்போதைய சூழலுக்கேற்ப கதையில் சில திருத்தங்களையும் செய்து தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்தி வருகிறார்களாம்.