டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரோஜா, சினிமா வாய்ப்புகள் குறைந்த பிறகு அரசியலில் பிரவேசித்தார். தற்போது ஆந்திராவிலுள்ள நகரி தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். ஆனபோதும், சினிமா, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் ரோஜா, அரசியல்வாதியான பிறகு சென்னையில் இருந்து இடம்பெயர்ந்து ஆந்திராவிலேயே நிரந்தரமாக குடியேறியிருக்கிறார்.
மேலும், 2014ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு நகரி தொகுதி எம்எல்ஏவானார். ஆனபோதும், வருடத்திற்கு ஒரு முறை கூட தொகுதி பக்கமே ரோஜா வருவதில்லை என்றொரு குற்றச்சாட்டு நகரி தொகுதி மக்களிடம் நிலவி வருகிறது. இதனால் அந்த தொகுதியிலுள்ள ஐந்து கிராமத்து மக்கள் ஒன்று திரண்டு எங்களது தொகுதி எம்எல்ஏவை காண வில்லை என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
முன்னதாக, ஹிந்துபூர் தொகுதி எம்எல்ஏவான நடிகர் பாலகிருஷ்ணாவும் தொகுதி பக்கம் வரவில்லை என்பதற்காக எங்கள் தொகுதி எம்எல்ஏவை காணவில்லை என்று அந்த தொகுதி மக்கள் போலீசில் புகார் செய்திருந்தது குறிப்படத்தக்கது.