தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீப நாட்களாக தெலுங்கு திரையுலகை சுற்றி சுழன்றடித்து வருகிறது பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்.. திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர்.. குறிப்பாக இயக்குனர் பூரி ஜெகன்நாத்தும் போதைப்பொருள் பயன்படுத்துபவர் தான் என சிலர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.. தவிர அவரது பாங்காங் ட்ரிப் மீதும் சந்தேக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மனம் திறந்துள்ளார் பூரி ஜெகன்நாத்.. அதில் போதைப்பொருட்களை உட்கொண்டால் நான் எப்படி என்னுடைய ஸ்க்ரிப்ட்டுகளை அவ்வளவு சீக்கிரம் எழுதி விட முடியும் என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.. மேலும் தனது பாங்காங் ட்ரிப்புகளை பற்றி குறிப்பிட்ட பூரி ஜெகன்நாத், “நான் என்னவோ பாங்காங்கிற்கு செல்வதே செக்ஸுக்கும், மசாஜூக்கும் தான் என்பது போல சொல்லப்படுகிறது.. உண்மையில் அங்கே செல்வது கதை எழுதுவதற்குத்தான்.
அதுமட்டுமல்ல அடிக்கடி மசாஜ் செய்துகொள்வதற்கு அது ஒன்றும் சுகமான விஷயம் அல்ல., ரொம்பவும் வலி நிறைந்த மிக கஷ்டமான ஒன்று.. அப்படியும் நான் மசாஜ் செய்வது என மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தெரியுமே.. 56 வயதான பொன்சி என்கிற பெண்மணிதான் எனக்கு மசாஜ் செய்வார். இளம்பெண்களை நான் மசாஜ் செய்வதற்கு அனுப்பதில்லை” என்கிறார் பூரி ஜெகன்நாத்.