தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அக்ஷ்ய் குமார் நடிப்பில் அடுத்தப்படியாக வெளியாக இருக்கும் படம் "டாய்லெட் ஏக் பிரேம் கதா". பிரதமர் மோடியின் கனவு திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி ஒரு சமூக படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. ஸ்ரீ நாராயண் சிங் இயக்குகிறார். ஆகஸ்ட் மாதம் படம் வெளியாக உள்ள நிலையில் இப்படம் ஆன்லைன் லீக்காகி உள்ளது. ஆனால் இந்த விஷயம் படக்குழுவினர் கவனத்திற்கு உடனடியாக வந்ததால் மேற்கொண்டு லீக்காமல் தடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கூறுகையில், படம் ஆன்லைனில் லீக்கானது குறித்து உடன் தகவல் வந்தது. தற்போது அது தடுக்கப்பட்டுள்ளது. யாரும் பயப்பட வேண்டாம். இந்த விஷயத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்து உடன் நடவடிக்கை எடுத்த கிரைம் பிராஞ்ச் போலீசாருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.