இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்கத் திரையுலகில் சில நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் இடையே சமீப காலமாக போதைப் பொருளைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த விவகாரத்தில் சிக்கிய திரைப் பிரபலங்கள் சிலரை விசாரணைக்கு வருமாறு சிறப்பு விசாரணைக் குழுவினர் அழைத்தனர்.
இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகர் சுப்பராஜ், ஒளிப்பதிவாளர் ஷாம் கே நாயுடு ஆகியோர் விசாரணைக்குச் சென்று வந்தனர். அவர்களிடமிருந்து சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், சில நடிகர், நடிகைகள் அடுத்தடுத்த நாட்களில் விசாரணைக்குச் செல்ல உள்ளார்கள். அவர்களில் தற்போது 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் முமைத் கானும் ஒருவர். வரும் 27ம் தேதி அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி அவர் விசாரணையில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.
விசாரணைக் குழுவினர் தங்களது விசாரணையை மிகவும் இறுக்கியுள்ளதால் சில திரைப் பிரபலங்கள் கைது செய்யப்படலாம் என்றும் டோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகிறார்கள்.