டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள நடிகர் சங்கத்திற்கு (அம்மா) வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக தற்போது இன்னோசெண்ட் உள்ளார். செயலாளராக மம்ட்டியும், துணை செயலாளராக மோகன்லாலும் உள்ளனர். பொருளாராக இருந்த திலீப் சமீபத்தில் நீக்கப்பட்டார்.
மலையாள நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன் மூலம் 10 கோடி ரூபாய் வருமானம் வந்ததாகவும் ஆனால் வருமானவரித்துறைக்கு 2 கோடி மட்டுமே கணக்கில் காட்டப்பட்டுள்ளதாகவும் வருமாவரித்துறைக்கு புகார் சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து வருமானவரித்துறையினர் கடந்த 6 ஆண்டுகளில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள், அதன் மூலம் கிடைத்த வருமானம். செலவு செய்யப்பட்ட விபரங்களை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
"வருமானத்தின் பெரும் பகுதியை நடிகர்களின் நலனுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முறையான கணக்கு இருக்கிறது. அதிக பணம் புரளும் சங்கங்களுக்கு இதுபோன்ற நோட்டீஸ் வருவது வழக்கமான ஒன்றுதான். இதை பெரிதுப்படுத்த தேவையில்லை. சங்கத்தின் ஆடிட்டரும், வழக்கறிஞரும் அதனை கவனித்துக் கொள்வார்கள்" என்றார் நடிகர் சங்க நிர்வாகி ஒருவர்.