ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு கமல் வெளியிட்ட அறிக்கையில் தமிழக அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். அதில், ஒன்றாக திரைத்துறையில் வரிவிலக்கு சலுகை பெறுவதற்கு பெரிய அளவில் லஞ்சம் பெறப்படுகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனை இயக்குனரும், நடிகருமான பார்த்திபனும் ஒப்புக் கொண்டிருக்கிறார். நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவரிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:
வரிவிலக்கு பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. என்னை போல ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் பயத்தின் காரணமாக லஞ்சம் கொடுக்கிறார்கள் என்று கமல் கூறியிருப்பது மிகச் சரியானது. அவர் சொல்லியிருக்கிற ஒரு சிலரில் நானும் ஒருவன். என் படத்துக்கும் லஞ்சம் கேட்டார்கள் நான் தர மறுத்துவிட்டேன். லஞ்சத்தை அவர்கள் நேரடியாக கேட்பதில்லை. மறைமுக கேட்கிறார்கள், அல்லது உணர்த்துகிறார்கள். படம் தாமதமானாலும் நஷ்டம், வரிவிலக்கு கிடைக்காவிட்டாலும் நஷ்டம் என்பதால் வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர்களும் கொடுத்து விடுகிறார்கள். இது இந்த ஆட்சியில் மட்டுமல்ல எல்லா ஆட்சியிலும் நடந்து வரும் விஷயம்.
தவறு நடக்கிறது என்று சுட்டிக் காட்டினால் அரசு இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர நிரூபியுங்கள் பார்க்கலாம் என்று சொல்வது தேவையற்றது. ஓட்டுப் போட்ட மக்களுக்கு கேள்வி கேட்க உரிமையிருக்கிறது. அப்படி இருக்கும்போது தகுதியோடு இருக்கிற ஒரு நடிகர் தவறை சுட்டிக்காட்டுவது வரவேற்கத்தக்கது. கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது அமைச்சர்களின் கடமை.
இவ்வாறு பார்த்திபன் கூறினார்.