'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிப்பேன், முன்னணி ஹீரோக்களுக்கு மட்டுமே ஜோடியாக நடிப்பேன்' என்பது போன்ற எந்த நிபந்தனையையும் விதிப்பது இல்லை, நிக்கி கல்ராணி. காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.
யார் ஹீரோ, பெரிய பட்ஜெட்டா, படத்தில் தனக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்பது பற்றி எல்லாம் கவலைப்படாமல், வரும் வாய்ப்புகளை எல்லாம் வளைத்து போடுவதால், இப்போது, அவர் வசம் அதிக படங்கள் உள்ளன. மரகத நாணயம், டீம் 5 என, அடுத்ததுத்து படங்கள் ரிலீசாவதும், அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
முன்பெல்லாம், சென்னை வந்தால், ஓட்டலில் தான் தங்குவார் நிக்கி. இப்போது, எழும்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், வாடகைக்கு வீடு எடுத்து விட்டார். இதே அடுக்கு மாடி குடியிருப்பில் தான், நயன்தாராவும் தங்கியுள்ளாராம்.