ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தனுஷ் இத்தனை வருடங்களில் யாரும் எதிர்பார்க்காத ஒரு இடத்தை அடைந்திருக்கிறார். இந்த முகமெல்லாம் ஹீரோவோ என்று கேள்வி கேட்ட பலருக்கு தன்னுடைய கடுமையான உழைப்பால் திறமையான நடிப்பால் பல படங்களில் பதிலடி கொடுத்திருக்கிறார். 'ஆடுகளம்' படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்றார்.
ஹிந்தித் திரையுலகத்திலும் 'ராஞ்சனா' படத்தின் மூலம் வசூல் சாதனை படைத்தார். தொடர்ந்து இன்றைய இளம் ஹீரோக்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பாக அமிதாப் பச்சனுடனும் சேர்ந்து நடித்தார். இப்போது 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் த பாகிர்' ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இதுவும் இன்றைய இளம் ஹீரோக்களுக்குக் கிடைக்காத ஒரு வாய்ப்புதான்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது பற்றி தனுஷ் “முடிவடைந்துவிட்டது, ஃபாகிரின் பயணம் முடிவடைந்தது. நிச்சயமாகவே எக்ஸ்ட்ரார்டினரிதான். என்னுடைய மொத்த குழுவினருக்கும் என்னுடைய அன்பும் நன்றியும். உங்கள் அனைவரையும் மிஸ் செய்கிறேன், அடுத்த நிறுத்தம் வீடு தான்” என்று கூறியிருக்கிறார். இப்படம் வெளிவந்ததும் தனுஷ் ஹாலிவுட் வரையிலும் பேசப்படுவார் என எதிர்பார்க்கலாம்.
தனுஷ் நாயகனாக நடித்துள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' அடுத்த வாரம் வெளியாக உள்ளது.