இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சாய் பல்லவி நடித்த பிரேமம் படம் மலையாளத்தில் வெளிவந்த போது கேரள நாட்டிளம் இளைஞர்கள் பலரின் மனதிலும் இடம் பிடித்தவர் மலர் டீச்சர். அந்தப் படத்தில் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களைக் கட்டிப் போட்டவர். பிரேமம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போது அந்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதை அந்த அளவிற்குக் கிண்டலடித்தனர் மலர் டீச்சர் ரசிகர்கள். தமிழில் மட்டும் நடிக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்ட சாய் பல்லவி தெலுங்கில் நாளை வெளியாக உள்ள பிடா படம் மூலம் அறிமுகமாக உள்ளார்.
தெலுங்குத் திரையுலகில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹீரோயின்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. தெலுங்கிலும், தமிழிலும் தற்போது மலையாள நடிகைகள் தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் தெலுங்குத் திரையுலகத்தில் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் நடிகைககளுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும். த்ரிஷா, சமந்தா ஆகியோரது வரிசையில் அடுத்து சாய் பல்லவியும் இடம் பிடிப்பாரா என்பது பிடா வந்த பிறகுதான் தெரியும்.
மலையாளத்தில் பிரேமம் மூலம் வந்த மேஜிக் சாய் பல்லவிக்கு தெலுங்கில் ஃபிடா மூலமும் கிடைத்தால் தெலுங்கு தேசத்தின் அடுத்த கனவுக் கன்னி சாய் பல்லவிதான்.