அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மும்பை: சஞ்சய் தத் விதி முறைகளின்படியே முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார் என மகாராஷ்டிரா அரசு ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஏ.கே. 56 துப்பாக்கி வைத்திருந்ததாக பாலிவுட் நடிகர் சஞ்சய் த்த கைது செய்யப்பட்டார். அவருக்கு தடா கோர்ட் சிறை தண்டனை விதித்தது. மும்பை ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவ்வப்போது பரோலில் வெளிவந்தார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலையானார். இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மகாராஷ்டிரா அரசு தாக்கல் செய்ய பதில் மனு,
சஞ்சய் தத்த சிறை விதிமுறைகளின்படியே விடுதலை செய்யப்பட்டார் அவர் நன்னடத்தையுடன் இருந்ததற்கான சான்றுகள் சட்டரீதியாக பரிசீலிக்கப்பட்டன. இதில் அவர் சிறையில் மொத்தம் 1,570 நாட்கள் இருந்துள்ளார். 256 நாட்கள் பரோலில் அவ்வப்போது வெளியேசென்றுள்ளார்.
இவ்வாறு அந்த பதில் மனுவில் மகாராஷ்டிரா அரசு கூறியுள்ளது.