இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடனத்தை மையமாக கொண்ட படம் ஒன்றை டைரக்டர் ரெமோ டிசோசா இயக்க உள்ளார். இப்படத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்த கொண்டு பேசிய சல்மான் கான், இப்படத்தில் தனக்கு ஜோடியாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார் என்ற தகவலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் சல்மான் கான் பேசுகையில், ரெமோ இயக்க உள்ள படத்தில் நானும் ஜாக்குலினும் நடிக்கிறோம். ஜாக்குலின் ஒரு அற்புதமான டான்சர். இந்த படத்திலும் அவர் தனது திறமையை வெளிக்காட்டுவார் என நம்புகிறேன் என்றார். சல்மான் கான், தான் தற்போது நடித்து வரும் டைகர் ஜிந்த ஹை படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த பிறகு புதிய படத்தின் வேலைகளை துவக்க உள்ளார்.