இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
வித்தியாசமான படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அக்ஷ்ய் குமாரின் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் வித்தியாசமான படம் தான் "கோல்டு". இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு 1948-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் இந்திய பெற்ற முதல் தங்கப்பதக்கத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
இதில் அக்ஷ்ய் குமார், நாகினி புகழ் மவுனி ராய் நடிக்கிறார்கள். அக்ஷ்ய், பெங்காலிக்காரராக நடிக்கிறார். பெங்காலி மொழியை பேச அவருக்கு பெங்காலியை சேர்ந்த மொழிப்பெயர்பாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கோல்டு படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது. அக்ஷ்ய், மவுனி பங்கேற்றுள்ளனர்.
கோல்டு படத்தை ரீமோ காக்தி இயக்க, எக்சல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்தாண்டு சுதந்திர தினத்தில் கோல்டு ரிலீஸாக உள்ளது.