நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
"ஏய் தில் ஹே முஷ்கில்" படத்தின் வெற்றியை தொடர்ந்து ரன்பீர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் "ஜகா ஜசூஸ்". சுமார் மூன்றாண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த இப்படம், ஒருவழியாக வரும் வெள்ளியன்று(ஜூலை 14) ரிலீஸாக உள்ளது. இப்படத்திற்கான புரொமோஷனில் பிஸியாக இருந்த ரன்பீர், நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
ஜகா ஜசூஸ் உருவாக மூன்றரை ஆண்டுகள் ஏன்?
நீங்கள் சொல்வது உண்மை தான். படம் உருவாக மூன்றரை ஆண்டுகளாகிவிட்டது. இதற்கு காரணம் இயக்குநர் அனுராக் பாசு தான். அவர், உணர்வுப்பூர்வமாக ஆழ்மனதில் இருந்து ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார். இந்தப்படம் உருவான போது நானும், கத்ரீனாவும் வேறு சில படங்களில் கூட நடித்தோம். ஆனால் அனுராக் அப்படி செய்யவில்லை, முழுக்க முழுக்க இப்படத்தையே உருவாக்கி வந்தார். மேலும் ரசிகர்கள் ஒரு படம் உருவாக மூன்று மாதம் ஆகிறதா... இல்லையா மூன்றரை ஆண்டுகள் ஆகிறதா... என்று பார்ப்பது கிடையாது. அவர்கள் விரும்புவது எல்லாம் ஒரு நல்ல, வித்தியாசமான படத்தை தான். அதை இப்படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்.
திடீரென தயாரிப்பாளரானது ஏன்?
ஜகா ஜசூஸ் படத்தை தயாரிக்க தனிப்பட்ட காரணம் எதுவும் கிடையாது. இப்படத்திற்கு பிறகு நான் தொடர்ந்து படம் தயாரிப்பேனா என்று தெரியாது. பார்பி படத்தின் வெற்றிக்கு பிறகு நானும், அனுராக்கும் இணைந்து, நடிகர் கிஷோர் குமாரின் வாழ்க்கையை படமாக எடுக்க நினைத்தோம். ஆனால் அது முடியாமல் போக, இந்தப்படத்தின் கதையை அனுராக் என்னிடம் சொன்னார். கதை பிடித்திருந்தது, இது ஒரு உலகத்தரமான படமாக இருக்கும், வித்தியாசமான படமாக இருக்கும் என்று நம்பினேன். ஆகையால் இப்படத்தை தயாரிக்க முன்வந்தேன்.
இந்தப்படத்தில் நடனத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் போல?
அதற்கு காரணம் இயக்குநர் அனுராக் பாசு தான். அவர் ஒரு சிறந்த நடன அமைப்பாளரும் கூட. அவருக்கு டான்சிங் சென்ஸ் அதிகம், அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்று கொண்டேன்.
படங்களின் தோல்வியை எப்படி எடுத்து கொள்வீர்கள்?
என்னுடைய சினிமா கேரியரில் நிறைய பிளாப் படங்கள் கொடுத்திருக்கிறேன். வெற்றி, தோல்வி என் கையில் இல்லை. ஒவ்வொரு படத்திற்கும் நான் எனது உழைப்பை தருகிறேன். ஏய் தில் ஹே முஷ்கில் படம் ஹிட்டானது. என்னுடைய எல்லாம் படங்களும் இதுபோன்று வெற்றி பெறுமா என்று தெரியாது. ஜகா ஜசூஸ் வெற்றி பெறலாம், தோல்வி அடையலாம். என்னை பொறுத்தமட்டில் ஒரு நடிகர் இந்த துறையில் தொடர்ந்து போராடுவது தான் பெரிய விஷயம்.
நிஜ வாழ்க்கையில் நீங்கள் துப்பறிவாளனா?
சினிமா துறையில் என்ன நடக்கிறது என்பதை அறிய ஆவலாய் இருப்பேன். ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி போன்றோர் எந்த மாதிரி படம் இயக்குகிறார்கள். சல்மான், அமீர்கானின் அடுத்த படம் என்ன போன்றவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள ஆவலாய் இருப்பேன்.
தற்போது நீங்கள் சிங்கிளாக இருக்கிறீர்களா... இல்லை யாருடானது டேட்டிங்...?
திருமணத்திற்கு முன் வரை யாருடனாவது நான் டேட்டிங் போகிறேன், இல்லை போகாமல் உள்ளேன். அது எல்லாம் விஷயமே கிடையாது. திருமணம் ஆகும் வரை நான் எப்போதும் சிங்கிள் தான்.
நன்றி! மீண்டும் ஒருமுறை வேறு ஒரு தருணத்தில் சந்திப்போம் என்று விடைபெற்றார்.