ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த 1993-ம் ஆண்டு யாஷ் ஜோகர் தயாரிப்பில், மகேஷ் பட் இயக்கிய கும்ரா என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவியும், சஞ்சய் தத்தும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். இப்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அபிஷேக் வர்மன் இயக்கத்தில், கரண் ஜோகர் தயாரிப்பில், "சித்தாத்" என்ற படம் உருவாக உள்ளது. மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இப்படத்தில் வருண் தவான், ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் இப்போது சஞ்சய் தத் மற்றும் ஸ்ரீதேவி இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஸ்ரீதேவி மற்றும் சஞ்சயிடம், கரண் ஜோகர் பேசி சம்மதம் வாங்கிவிட்டதாகவும், விரைவில் இவர்கள் நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.