தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இதோ அதோ என எதிர்பார்த்த அந்தநாளும் வந்துவிட்டது. ஆம், மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் நாளை பூஜையுடன் துவங்குகிறது. ஏற்கனவே சொன்னது போலவே மோகன்லாலுக்கு மாஸ் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தை கொடுத்தவரும், பிரணவின் குருநாதருமான இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இதற்கு முன்பு சோஷியல் மீடியாவில் பரவியது போல இந்தப்படம் கைவிடப்படவெல்லாம் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.
அதேபோல மோகன்லால் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ஓடியன். விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் மிக்கவரும், அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் மகாபாரதம் படத்தை இயக்க இருப்பவருமான ஸ்ரீகுமார் மேனன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். அதாவது மகாபாரதம் தொடங்கப்படுவதற்கு இந்தப்படம் ஒரு முன்னோட்டம் மாதிரி உருவாக இருக்க இருக்கிறது. புலி முருகன் படத்தை விட மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்தப்படத்தில் மோகன்லால் பிளாக் மேஜிசியனாக நடிக்கிறார்.
இந்த இரண்டு படங்களையும் மோகன்லாலின் சொந்த நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் அவரது நண்பர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.