விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
டாக்டர் ராஜசேகர் நாயகனாக நடிக்கும் படம் பி.எஸ்.வி.கருடா வேகா. ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் பூஜாகுமார், கிஷோர், ஆதித்யா அருண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், இன்று முதல் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.
மேலும், இப்படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் அனைத்தும் ஐதராபாத்திலுள்ள சார்மினாரில் படமாக்கப்பட உள்ளதாம். ஆனால், ரம்ஜானையொட்டி அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், இன்று முதல் சார்மினாரில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்துள்ளதாம். இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் டாக்டர் ராஜசேகர், கிஷோர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்களாம்.