டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'பாகுபலி' படத்தின் முதல் பாகம், இரண்டாம் பாகம் இரண்டும் வெளிவந்து சுமார் 2500 கோடி வரை வசூலித்து இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டு பாகங்களையும் பெரிய அளவில் எந்த ஒரு சர்ச்சையும் இல்லாமல் வெளியிட்டு தெலுங்குத் திரையுலகத்தைப் பற்றி பெரிய அளவில் பேச வைத்ததில் ராஜமௌலி ஒரு சாதனையாளராகவே இன்று வரை தெரிகிறார்.
ஆனால், சில தினங்களுக்கு முன் தான் அளித்த பேட்டியின் மூலம் ஒரு சர்ச்சை வளையத்திற்குள் ராஜமௌலியை சிக்க வைத்துவிட்டார் ஸ்ரீதேவி. ராஜமௌலி மீது மிகப் பெரிய மரியாதை வைத்திருந்தேன், அவர் என்னைப் பற்றி தவறானத் தகவலை எப்படி பேட்டியில் கூறலாம் என்ற ரீதியில் ஸ்ரீதேவி அளித்த பேட்டி தெலுங்குத் திரையுலகில் தற்போது புகைய ஆரம்பித்துவிட்டது.
தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் ஸ்ரீதேவி நடித்திருந்தாலும், ராஜமௌலி நான் சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லியிருக்கிறார் என்றே ஸ்ரீதேவி அவருடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி 'பாகுபலி' படத்தில் நடிக்க அப்படி 'டிமான்ட்' செய்தாரா இல்லையா என்பதைப் பற்றி தக்க ஆதாரங்களுடன் ராஜமௌலி சொன்னால் மட்டுமே இந்த சிறிய கறை அவரை விட்டு விலகும். அதுவரை, ஆளுக்கொரு விதமாக கமெண்ட் அடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.