ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில், பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மலையாள நடிகர் திலீப்பும், அவரது மனைவி மஞ்சுவாரியாரும் பிரிய பாவனா தான் காரணம், அதனால் அவர் தான் அவரை கடத்தி துன்புறுத்த ஏற்பாடு செய்திருக்ககூடும் என்ற தகவல் பரவியது. இதனை திலீப் மறுத்து வந்தார்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல்சர் சுனில் திலீப்புக்கு எழுதிய கடிதத்தில் பாவனாவை கடத்த சொன்னது திலீப்தான் என்கிற தொணியில் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளான். ஆனால் இதனை மறுத்து திலீப் பல்சர்சுனில் தன்னை மிரட்டுவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் பாவனா கடத்தல் விவாகரத்தில் தனக்கு துளியும் சம்பந்தம் இல்லை என்றும், இது தொடர்பான எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாக திலீப் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அவர் எழுதியிருப்பதாவது:
பாவனா கடத்தல் விவகாரத்திற்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக எனக்கு ஆதரவாக உள்ள அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மலையாள திரைப்பட உலகில் எனக்கு உள்ள மரியாதையை கெடுக்கும் வகையில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். என் மீது ரசிகர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கவும், விரைவில் வெளியாக உள்ள ராமலீலா என்ற திரைப்படத்தை வெளிவராமல் தடுக்கவும் நடைபெற்று வரும் கூட்டு சதியாகவே இதை நான் பார்க்கிறேன்.
கடத்தல் விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி எழுந்த சர்ச்சையால் கடந்த சில மாதங்களாக நான் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன். இந்த வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை உள்பட எந்த சோதனைக்கும் தயாராக உள்ளேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.