ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினி ரசிகர்களை சந்தித்ததிலிருந்து அவரைப்பற்றிய செய்திகள் அதிகம் வெளி வருகின்றன. அதிலும் அவர் அரசியல் குறித்து பேசியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம் தான் அரசியலுக்கு வருவேன் என்று இன்னும் ஆணித்தரமாக ரஜினி கூறவில்லை. தற்போது ரஞ்சித் இயக்கத்தில் மும்பையில் நடந்து வரும் காலா படத்தில் பிஸியாக உள்ளார் ரஜினி.
இந்நிலையில் விஐபி-2 படம் இசை வெளியீடு தொடர்பாக மும்பை சென்றிருந்த சவுந்தர்யாவிடம், ரஜினி அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சவுந்தர்யா, அப்பா மனதில் பட்டதை செய்ய கூடியவர், அவர் எதை செய்தாலும் சரியாக தான் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் என்ற முறையில் நாங்கள் அவருக்கு ஆதரவு அளிப்போம், அவரின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றார்.