டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா, அனுஷ்கா இருவரும் அதிக ரசிகர்களை கொண்ட நடிகைகள். அதேபோல் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகைகளும் இவர்கள்தான். இதில் நயன்தாராவைப் பொறுத்தவரை தற்போது தமிழில் இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர்காலம், வேலைக்காரன் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இருந்தாலும், டோரா படம் கொடுத்த அதிர்ச்சி தோல்வி அவரை சற்றே தடுமாற வைத்திருக்கிறது.
அதனால், இனிமேல் தமிழை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம் என்று சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு மறுபடியும் தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் நயன்தாரா. அந்த வகையில், சிம்ஹா, ஸ்ரீ ராம ராஜ்ஜியம், கவுதமிபுத்ர சாதகர்னி என மூன்று படங்களில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர், அடுத்தபடியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்திலும் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
மேலும், இதற்கு முன்பு கன்னட நடிகர் சுதீப்பை வைத்து தான் இயக்கிய முடிஞ்சா இவனை புடி என்ற படத்தை தமிழ், கன்னடத்தில் இயக்கிய கே.எஸ். ரவிக்குமார். இந்த புதிய படத்தை தமிழ், தெலுங்கில் இயக்குகிறாரம். அதனால் இரண்டு மொழிக்கும் சேர்த்து நயன்தாராவுக்கு ரூ. 4 கோடி சம்பளம் பேசியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.