துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
ஈரம், மிருகம், அரவாண், யாகவராயினும் நாகாக்க, மரகதநாணயம் உள்பட பல படங்களில் நடித்தவர் ஆதி. தொடர்ந்து அவரது படங்கள் தோல்வியை சந்தித்ததால் சறுக்கலை சந்தித்து வந்த ஆதி, தனது தாய்மொழியான தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில், கடந்த வாரம் வெளியான மரகதநாணயம் படம் அவருக்கு வெற்றியை கொடுத்துள்ளது.
இதுகுறித்து மரகதநாணயம் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆதி கூறுகையில், யாகவராயினும் நாகாக்க படத்தை ரொம்பவே எதிர்பார்த்தேன். மெகா பட்ஜெட்டில் தயாரான அந்த படம் தோல்வியடைந்து விட்டது. அதன்பிறகு வித்தியாசமான கதைகளை தேடினேன். அப்போது டைரக்டர் சரவண், மரகத நாணயம் கதையை சொன்னார். அதில் பெரிதாக ஹீரோயிசம் என்பது இல்லை. பல கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. என்றாலும், கதையின் வித்தியாசம் காரணமாக நடித்தேன். இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது.
இதன்மூலம் நல்ல ஸ்கிரிப்ட்தான் வெற்றியை கொடுக்கும் என்பது தெரிகிறது. அதனால், இப்போது மட்டுமின்றி இனிமேல் நான் நடிக்கிற ஒவ்வொரு படங்களிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஜெயிக்கிற கதை என்பதுதான் எனது டார்க்கெட்டாக இருக்கும். முக்கியமாக, நான் ஹீரோ என்னைச் சுற்றித்தான் கதை அமைய வேண்டும் என்று ஒருபோதும் சொல்லவே மாட்டேன் என்கிறார் ஆதி.
மேலும், நேற்று முன்தினம் சென்னையில் மரகதநாணயம் படத்தின் சக்சஸ் மீட் நடந்தபோது, அப்படத்தின் இயக்குனர் சரவணை மேடையிலேயே தனது கைகளால் அலாக்காக தூக்கி தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினார் ஆதி.