Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாவனா கடத்தலில் திலீபுக்கு தொடர்பா? கேரளாவில் பரபரப்பு

26 ஜூன், 2017 - 10:11 IST
எழுத்தின் அளவு:
Bhavana-kidnapped-Case-:-Did-main-accused-is-Dileep.?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில், பாவனா டிரைவர் மார்ட்டின் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பாவனா கடத்தலுக்கும், நடிகர் திலீபுக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியானது. கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் சிறையில் இருந்தபடியே நடிகர் திலீபுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதம் நேற்று வெளியானது. அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதாவது:

திலீப் அண்ணா... நான் சிறையில் இருந்து கஷ்டப்பட்டு இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்புகிறேன். இந்த கடிதம் கொண்டு வருபவருக்கு இந்த வழக்கு பற்றி எதுவும் தெரியாது. நான் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு முன்பு தங்களை சந்திக்க முயன்றேன் முடியவில்லை. என் வாழ்க்கை என்ன ஆனாலும் பரவாயில்லை. ஆனால் என்னை நம்பி இந்த வழக்கில் சிக்கிய 5 நண்பர்களையும் நான் காப்பாற்ற வேண்டும். அதனால் எனக்கு தருவதாக கூறிய பணத்தை உடனடியாக தர வேண்டும். மொத்தமாக தர முடியாவிட்டாலும், 5 தவணையாக கொடுங்கள், இனியும் என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. உங்களை இதுவரை நான் கைவிடவில்லை. இப்போது எனக்கு பணம் தேவைப்படுகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாவனா கடத்தலுக்கு தூண்டுகோலாக இருந்தவர் திலீப் என்பது நிரூபணமாகும். இந்த நிலையில் நடிகர் திலீப், பல்சர் சுனில் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பணம் கொடுக்காவிட்டால் பாவனா வழக்கில் சிக்க வைத்து விடுவதாவும் மிரட்டுவதாக போலீஸ் டி.ஜி.பியிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த கடிதமும், திலீபின் புகாரும் கேரளாவில் பெரும் பரபரப்பபை எற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in