விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
பிரபல சின்னத்திரை நடிகை மவுனி ராய். தமிழில் வெளியான நாகினி சீரியலில் பாம்பாக நடித்து பிரபலமானவர். இவர், வெள்ளித்திரையில் அறிமுகமாக இருப்பதாகவும், நடிகர் சல்மான்கான் இவரை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இவர் அக்ஷ்ய் குமார் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
இயக்குநர் ரீமா காக்தி, அக்ஷ்ய் குமாரை கொண்டு "கோல்டு" என்ற படத்தை இயக்குகிறார். ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பல்பீர் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. இதில் பல்வீர் சிங் ரோலில் அக்ஷ்ய் குமார் நடிக்க அவருக்கு ஜோடியாக மவுனி ராய் நடிக்க உள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் மவுனி ராய். சுமார் 20 முதல் 25 நாட்கள் தனக்கான கால்ஷீட்டை கொடுத்திருக்கிறார். கோல்டு படத்தை எக்சல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்தாண்டு சுதந்திர தினத்தில் படம் ரிலீஸாக உள்ளது.