டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, சனா நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் இன்று எந்த சிக்கலும் இன்றி வெளிவந்தது. சிம்புவின் சமீபத்திய வரலாற்றில் சொன்ன தேதியில் பிரச்சினையின்றி வெளிவந்திருக்கும் படம் இது தான் என்பதே பெரிய சாதனை. இதற்கும் கடைசி நேரத்தில் ஒரு பிரச்சினை வந்தது.
"தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் படத்தை தயாரிக்க என்னிடம் 25 லட்சம் வாங்கினார். அதனை திருப்பித் தரவில்லை. திருப்பி கேட்டதற்கு அடியாட்களை வைத்து மிரட்டினார். எனது பணத்தை திருப்பித் தந்த பிறகுதான் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்" என்று எம்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து மைக்கேல் ராயப்பன் பதில் மனு தாக்கல் செய்தார். அப்போது "படம் வெளிவர அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டோம். கோர்ட்டில் ஒரு கோடி ரூபாய் கட்டுகிறேன். வழக்கு நடக்கட்டும், படமும் வெளிவரட்டும்" என்று மைக்கேல் ராயப்பனின் வழக்கறிஞர் கோர்ட்டில் கூறினார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். மனுதாரார் 25 லட்சம் பிரச்சினைக்குதான் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால் படத்தின் தயாரிப்பாளர் 25 லட்சத்துக்கு வங்கி உத்தரவாதம் அளித்து படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று கூறியது. இந்தப் பணத்தை 30ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் கூறியது. இதனால் சிம்பு படம் எந்த வம்பும் இல்லாமல் இன்று வெளியானது.
பொதுவாக சிம்பு படம் வெளியாகும் போது அதிகாலை காட்சி திரையிடப்படும். ஆனால், கொடுக்கல் வாங்கல் பிரச்னை நேற்று இரவு வரை நீடித்ததால் காலையில் படம் வெளியாகவில்லை 10.30 - 11.00 மணிக்கு தான் ஏஏஏ படம் வெளியானது.