'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
தமிழ்த் திரையுலகில் இப்போதைக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராதான் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தங்களது படங்களில் நடிக்க வைக்க தமிழ் ஹீரோக்கள் மட்டுமல்ல தெலுங்கு ஹீரோக்களும் தவமாய் காத்துக் கிடக்கிறார்கள். நயன்தாரா தங்களது படத்தில் நடித்தால் அது ஒரு தனி 'இமேஜ்' என அவர்கள் நினைப்பதே அதற்கு ஒரு காரணம்.
மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழுக்கு வந்து இங்கு புகழ் பெற்று, தெலுங்கிலும் தனி வரவேற்பைப் பெற்றவர் நயன்தாரா. தெலுங்குத் திரையுலகின் அதிரடி ஹீரோவான பாலகிருஷ்ணா ஜோடியாக அவர் முதலில் நடித்த 'சிம்ஹா' படம் 2010ம் ஆண்டின் மிகப் பெரும் வசூல் படமாக அமைந்தது. அதற்கடுத்து பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்த 'ஸ்ரீராம ராஜ்யம்' படமும் வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின் பாலகிருஷ்ணாவின் 100வது படமான 'கௌதமி புத்ர சாதகர்ணி' படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டார்கள். ஆனால், அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்க உள்ள புதிய படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவை அணுகியுள்ளார்களாம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'ஆதவன்' படம் வெற்றிப் படமாக அமைந்ததால், மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடிக்க சம்மதிக்கலாம் என்கிறார்கள்.