ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு |
டைரக்டர் சுந்தர்.சி - நடிகை குஷ்பு இணைந்து தயாரித்து வரும் மெகா தொடர் நந்தினி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரை ராஜ்கபூர் இயக்கி வருகிறார். இதில் நித்யாராம், மாளவிகா வேல்ஸ், ராகுல் ரவி உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நந்தினி தொடரில் கங்கா என்ற கேரக்டரில் நடித்து வரும் நித்யாராம், கன்னடத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே தமிழில் அவள் என்ற தொடரில் நடித்த அவர் கன்னடம், தெலுங்கிலும் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.
இந்நிலையில், இவரது இணையபக்கத்தில் ஒரு சென்னை வாலிபர், அடிக்கடி ஆபாச மெசேஜ்களை அனுப்பி நித்யாராமை டென்சன் செய்து வந்திருக்கிறார். இதை பலமுறை சகித்துக்கொண்டு வந்த அவர், தற்போது அந்த இளைஞரின் புகைப்படத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அதோடு, "தன்னுடைய ரசிகர் எனக்கூறிக்கொள்ளும் இவர் எனக்கு தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பி வருகிறார். இது போன்ற செயல்களை நான் அனுமதிப்பதில்லை. இதுபற்றி மற்றவர்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காகவும், எந்த பெண்ணிடமும் அவன் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவுமே இதை இங்கு பதிவு செய்கிறேன். எனக்கு இனிமையான பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் காட்டும் அன்பு மற்றும் ஆதரவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ஒரு நடிகை என்பதை விட முதலில் நான் ஒரு பெண் என்பதை அவன் உணர்ந்துகொள்ள வேண்டும். பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.