விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்தவர் ஸ்ரீதேவி. அதன்பிறகு செல்லமடி நீ எனக்கு தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். சின்னத்திரை நடிகைகளில் அதிகம் படித்த நடிகைகளில் இவரும் ஒருவர் பி.எஸ்சி நியூட்ரீசியன், எம்.பி.ஏ எச்ஆர் மேனேஜ்மெண்ட், எம்.எஸ்.சி சைக்காலஜி படித்திருக்கிறார். இப்போது எம்.எஸ்.சி கிரிமினாலஜி படித்துக் கொண்டிருக்கிறார். சிவில் சர்வீஸ் தேர்வும் எழுதிக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீதேவியின் இன்னொரு முகம் சின்னத்திரை த்ரிஷா. தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்கிறார். விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பில் இருக்கிறார். ரோட்டில் அடிபட்டு கிடக்கும் விலங்குளை காப்பாற்றி குணப்படுத்துவது ஸ்ரீதேவிக்கு பிடித்த வேலை. இது தவிர தனது அம்மாவுக்காக மிரப்பகாய் என்கிற நிறுவனம் தொடங்கியிருக்கிறார். ஊறுகாய், பொடி மற்றும் மசாலா வகைகளை விற்கும் நிறுவனம் இது. இதை பெரிய நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்பது ஸ்ரீதேவியின் லட்சியம்.