பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மும்பையில், பிரபல நடிகை அஞ்சலி ஸ்ரீவத்சவா, 29, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகர் மும்பையில், பாலிவுட் நடிகர், நடிகையர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வாடகைக்கு குடியிருந்த, போஜ்புரி நடிகை அஞ்சலி ஸ்ரீவத்சவா, 29, நேற்று, தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் இரவு முதலே, மொபைல் போன் அழைப்புகளை ஏற்காததால் சந்தேகம் அடைந்த அஞ்சலியின் உறவினர்கள், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவரின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், மின் விசிறியில் தொங்கியபடி இருந்த அஞ்சலியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அஞ்சலி தன் காதலன் ஒருவருடன் அந்த வீட்டில் லிவ்விங் டூ கெதராக வாழ்ந்து வந்ததாகவும், கடந்த சில நாட்களாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.