டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சின்னத்திரை, பெரியதிரை இரண்டிலும் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கிறார் தேவதர்ஷினி. இன்றைய தேதியில் மனோரமா, கோவை சரளாவிற்கு பிறகு காமெடியின் அடையாளம் தேவதர்ஷினிதான். காஞ்சனாவில் தொடங்கிய இவரது காமெடி பயணம் பெரிய திரையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சின்னத்திரையில் மர்ததேசம் தொடர் மூலம் தனது கேரியரை ஆரம்பித்தார். அதில் உடன் நடித்த சேத்தனை காதலித்த்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சண்டே கலாட்டா என்ற காமெடி நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். சினிமாவிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
தோளுக்கு மேல் மகள் வளர்ந்து விட்ட நிலையிலும் இப்போதும் அவர் படித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் முக்கிமானது. காஞ்சனா படத்தில் நடித்து முடித்த பிறகு சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் எம்எஸ்சி அப்ளைடு சைக்காலஜி படித்து முடித்தார். இப்போது டிப்ளமோ இன் கைடன்ஸ் அண்டு கவுன்சிலிங் கோர்ஸ் படித்துக் கொண்டிருக்கிறார். இவைகள் உளவியில் படிப்புகள்.
"படித்து முடித்ததும் கவுன்சிலிங் செண்டர் அமைப்பேனா என்று தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்தவர்களுக்கு, என்னை தேடி வருகிறர்களுக்கு மனரீதியான பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன்" என்கிறார் திவ்யதர்ஷினி. திவ்யதர்ஷினியின் தாயும், தந்தையும் கல்லூரி முதல்வர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.