தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பாக ஒரு திரைப்படம் எடுக்கப்பட உள்ளது. இதில் மன்மோகன் வேடத்தில் பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் நடிக்க உள்ளார்.
சஞ்சய் பாரு எழுதிய புத்தகம் : கடந்த, 2004ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமரான போது அவரது மீடியா ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. அவர், 2008-ம் ஆண்டு வரை அப்பணியில் இருந்தார். அவர் மன்மோகன் சிங்குடன் பணியாற்றியது குறித்து, ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - சந்தர்ப்பவாதமாக பிரதமரானவர் என்ற புத்தகத்தை எழுதினார். 2014ம் ஆண்டு வெளியான இப்புத்தகம், அப்போது நடந்த லோக்சபா தேர்தலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புத்தகத்தை வைத்து தான் தற்போது இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படம், 2018-ம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர் சுனில் போரா. இயக்குனர் விஜய் ரத்னாகர் கத்தே.
இது குறித்து நடிகர் அனுபம் கெர் கூறுகையில், சமகால வரலாற்றில் வாழும் ஒருவரின் வேடத்தை ஏற்று நடிப்பது சவாலான ஒன்று. இரண்டு தரப்பையும் ஒப்பிடுவதையும் தவிர்க்க முடியாது. எனினும், நான் சவால்களை விரும்புபவன். மன்மோகன் சிங்காக நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன், என்றார்.