டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜெர்மன் நாட்டிற்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது அவரை சந்தித்தார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. அப்போது அவர் குட்டை பாவாடை அணிந்திருந்ததோடு, பிரதமர் முன்பு கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தார். இதையடுத்து அவருக்கு கண்டனங்கள் எழுந்தது. என்றாலும் பின்னர், தனது அம்மாவுடன் தான் அமர்ந்திருக்கும் ஒரு அறைகுறை ஆடையணிந்த போட்டோவை வெளியிட்டு நாங்கள் சாதாரணமாகவே இந்த மாதிரிதான் இருப்போம். அதனால் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பது போன்று ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார் பிரியங்கா சோப்ரா.
இருப்பினும், அவருக்கு கண்டனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கவர்ச்சிப்புயல் சன்னி லியோன், பிரியங்கா சோப்ராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பிரியங்கா சோப்ரா அந்தமாதிரி உடையில் பிரதமரை சந்திக்க சென்றபோது யாரும் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. பிரதமரே அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்படியிருக்க மற்றவர்கள் இதற்கு கண்டனம் தெரிவிப்பது சரியல்ல. மேலும், ஒருவர் எப்படிப் பட்டவர் என்பதை அவர்கள் அணியும் உடையை வைத்து மதிப்பிடாமல் அவர்களது மனதை வைத்து மதிப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார் சன்னி லியோன்.