'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபகாலமாக அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியான அநேக படங்கள் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்துள்ளன. ஏர்லிப்ட், ருஸ்டம் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்துள்ள அக்ஷ்ய், இப்போது டாய்லட், பேடுமேன் போன்ற வித்தியாசமான சமூகம் சார்ந்த படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அக்ஷ்ய், அடுத்தப்படியாக பொறியாளர் ஜேஎஸ் கில் வேடத்தில் நடிக்க இருக்கிறார். யார் இந்த கில் என்பவர்களுக்கு ஒரு சின்ன பிளாஸ்பேக்.... மேற்கு வங்க மாநிலம் ராணி கஞ்ச் ஊரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு 1989-ம் ஆண்டு பெய்த கடும் மழையால் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் பணியாற்றிய 64 தொழிலாளர்கள் உயிரோடு மாட்டிக்கொண்டனர். இவர்கள் அனைவரையும் பொறியாளர் ஜேஎஸ்.கில் தன் திறமையால் உயிரோடு மீட்டெடுத்தார். இந்த சம்பவம் இப்போது படமாக உருவாக உள்ளது. இதில் கில் ரோலில் அக்ஷ்ய் குமார் நடிக்க உள்ளார்.
இப்படியொரு கதையை யார் இயக்க போகிறார்கள், யார் தயாரிக்க போகிறார்கள் போன்ற தகவல்கள் எல்லாம் வெளியாகவில்லை.