சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
காலா படத்தின் தலைப்பு மற்றும் மூலக்கதை என்னுடையது என்று ராஜசேகர் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
சமீபகாலமாக தமிழ் சினிமா உலகில் கதை திருட்டு மற்றும் தலைப்பு தொடர்பான பஞ்சாயத்துகள் அதிகமாகி வருகின்றன. இதில் பெரிய நடிகர்கள், சின்ன நடிகர்கள் என்று எல்லாம் கிடையாது. சூப்பர் ஸ்டார் முதல் அறிமுக நடிகர்களின் படங்கள் வரை இந்த பஞ்சாயத்துகள் இருக்கின்றன. தற்போது பஞ்சாயத்து எழுந்திருப்பது நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு...
கபாலி படத்தை தொடர்ந்து ரஜினி - ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். படத்திற்கு காலா என்று பெயர் வைத்துள்ளனர். கடந்த ஞாயிறு அன்று தான் படத்தின் ஷூட்டிங் மும்பையில் ஆரம்பமானது. படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மும்பையில் வாழும் நெல்லையை சார்ந்த தாதா ஒருவரின் கதை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜசேகர் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், "1996-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி, தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையில் "கரிகாலன்" என்ற தலைப்பை பதிவு செய்துள்ளேன். கரிகால சோழனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, அவர் செய்த அறச்செயல் மற்றும் வீரச்செயல்களை கொண்டு ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பதே என் லட்சியமாக இருந்து வருகிறது.
1995, 96-களில் அன்றைய ரஜினி ரசிகர்மன்ற தலைவர் சத்யநாராயணனிடம் உதவியுடன் ரஜினியின் இல்லத்திற்கு சென்று கரிகாலன் கதை தொடர்பாக சந்திக்க சென்றேன். ஆனால் அவர் பிறகு பேசலாம் என்று சொல்லிவிட்டு போட்டோ மட்டும் எடுத்து கொண்டார். மேலும் எனது கரிகாலன் படத்தின் தலைப்பை கே.எஸ்.ரவிக்குமார் மூலமாக "மயிலே குயிலே" பட ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியிட்டேன்.
ஏற்கனவே சில்வர் லைன் பிலிம் நிறுவனம், நடிகர் விக்ரமை வைத்து "கரிகாலன்" என்ற படத்தை ஆரம்பித்தார்கள். இதுதொடர்பாக கோர்ட் வரை சென்று அந்த படத்திற்கு தடை உத்தரவு வாங்கினேன். தொடர்ந்து எனது கரிகாலன் படத்தை பல தயாரிப்பு நிறுவனங்களிடம் சென்று சொல்லி வந்தேன்.
இந்நிலையில், தற்போது ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் "காலா கரிகாலன்" என்ற படம் உருவாகி வருகிறது. இதுகுறித்த செய்திகளை பத்திரிகை வாயிலாக தெரிந்து கொண்டேன். இதை கண்டு நான் மிகுந்த அதிர்ச்சியடைந்ததுடன், தீராத மன உளைச்சலுக்கும் ஆளானேன். என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும், கதையையும், கதையின் மூலகருவினையும் திருடி "கரிகாலன்" என்ற என்னுடைய தலைப்பை "காலா கரிகாலன்" என்று மாற்றி படம் எடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.