10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு |
பிரபுதேவா நடித்த தேவி படத்தை அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் வனமகன். ஜெயம்ரவி நாயகனாக நடித்துள்ள இந்த படம் வருகிற ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது. இந்தி நடிகை சாயிஷா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் வாய் பேசாத காட்டுவாசியாக நடித்துள்ளார் ஜெயம்ரவி. அந்தப் படத்தை அடுத்து மலையாளத்தில் வெளியான சார்லி படத்தை மாதவன்-சாய் பல்லவியை வைத்து ஏ.எல்.விஜய் தமிழில் ரீமேக் செய்வார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் டிராப் செய்யப்பட்டு விட்டது.
இந்நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் நாக சவுர்யா-சாய் பல்லவி நடிப்பில் கரு என்ற பெயரில் ஒரு திரில்லர் படத்தை தமிழ்-தெலுங்கில் இயக்கி வருகிறார் ஏ.எல்.விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தபடியாக ஐதராபாத்தில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. மேலும், இந்த கரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் நாக சவுர்யா, கதைப்படி சென்னை பையனாகவே நடித்து வருகிறார்.