நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
மம்முட்டி தற்போது நடித்து வரும் படம் 'மாஸ்டர் பீஸ்'. அஜய் வாசுதேவ் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் மம்முட்டி கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார். இது கல்லூரி சம்பந்தப்பட்ட கதை என்பதால் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக கோல்கட்டாவில் உள்ள பாத்திமா மாதா கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப்பகுதிக்கு பிரைவேட் செக்யூரிட்டி மூலம் படக்குழுவினரால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் சமீபத்தில் தேர்வெழுதுவதற்காக கல்லூரிக்கு வந்த மாணவர்களிடம் ரொம்பவே கெடுபிடி காட்டி தடுத்தி நிறுத்தியுள்ளார்கள் இந்த செக்யூரிட்டி ஆட்கள். இதனால் மாணவர்களுக்கும், செக்யூரிட்டி ஆட்களுக்கும் மோதல் ஏற்பட்டு அடிதடி வரை செல்லும் சூழல் உருவானது. இந்த தகவலை அறிந்து அங்கே வந்த கல்லூரி முதல்வர் மாணவர்களை சமாதானப்படுத்தி தேர்வெழுத அனுப்பி வைத்தாராம்.
ஷூட்டிங் ஆரம்பித்த தினத்தில் இருந்தே இந்த செக்யூரிட்டி ஆட்கள் கல்லூரி காம்பவுண்ட் ஓரமாக நடமாடுபவர்களிடம் கூட தகராறு செய்து வருவதாகவும் அவர்களில் பலபேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் என்கிற புகாரும் ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில் மாணவர்களுடன் இந்த நபர்கள் மோதலில் ஈடுபட்ட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.