தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் நாட்டின் கிராமத்து விளையாட்டான கில்லி, பம்பரம், கோலியை மையமாக வைத்து ஒரு முழுபடத்தையும் மலேசியாவில் எடுத்துள்ளார்கள். வேலைக்காக மலேசியா சென்ற கிராமத்து இளைஞர்கள் சிலரை அங்கு செட்டிலான ஒருத்தன் கிண்டல் செய்து வம்புக்கு இழுக்கிறான். எனக்கு எல்லாம் தெரியும் உங்களுக்கு எதுவுமே தெரியாது என்கிறான். அதற்கு இவர்கள் எங்களுக்கு கில்லி, பம்பரம், கோலி விளையாடத் தெரியும் என்கிறார்கள். அதிர்ச்சியாகும் வில்லன் அந்த விளையாட்டுகளில் என்னை ஜெயித்துவிட்டால் உங்களுக்கு நான் அடிமை என்கிறார். தமிழ்நாட்டு இளைஞர்கள் வில்லனை எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாம்.
புதுமுகங்கள் தமிழ், பிரசாத், நரேஷ், தீப்தி ஷெட்டி, சந்தோஷ்குமார் நடித்துள்ளனர். தலைவாசல் விஜய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். நாககிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.மனோகரன் தயாரித்து இயக்கி உள்ளார். "படத்தில் காதல் எதுவும் கிடையாது. இளைஞர்களின் போராட்டத்தையும், நம் கிராமகலாச்சரத்தையும் மலேசிய மண்ணில் பதிய வைக்கிற முயற்சி" என்கிறார் இயக்குனர் மனோஹரன்.