வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இந்தியத் திரையுலகம் என்றால் இந்தித் திரையுலகம்தான் என்ற ஒரு மாயை, கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. உலக அளவில் இந்தித் திரைப்படங்களுக்கான மார்க்கெட் அதிகம் இருந்ததால் இந்தியாவிலிருந்து வெளிவரும் படங்கள் என்றாலே அவை இந்திப் படங்கள்தான் என்ற நிலை இருந்து வந்தது. அதை 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் முறியடித்தது. அதிலும் 'பாகுபலி 2' படம் முந்தைய இந்தியத் திரையுலகச் சாதனைகளை முறியடித்து தென்னிந்தியப் படங்களும் சாதிக்க முடியும் என்று இந்த உலகுக்கு உணர்த்தியது.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் சுமார் 300 கோடி அளவில் தயாராகி 2200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது. எத்தனை கோடிகள் செலவு செய்தாலும் அதைத் தரமாகச் செலவு செய்தால் வசூலிலும் சாதிக்க முடியும் என்ற புதிய பாதை தற்போது உருவாகியுள்ளது.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு தென்னிந்தியாவில் பல கோடி ரூபாய் செலவில் புதுப்புது படங்கள் உருவாகி வருகின்றன. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க 400 கோடி ரூபாய் செலவில் '2.0' படம் உருவாகி வருகிறது. அடுத்து மோகன்லால் நடிக்க 'ரண்டமூழம்' படம் 1000 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ளது.
இவை தவிர சிரஞ்சீவி நடிக்க உள்ள 'உய்யலவாடா நரசிம்ம ரெட்டி' படம் 150 கோடி ரூபாய் செலவிலும், பிரபாஸ் நடிக்க உள்ள 'சாஹோ' படமும் 150 கோடி ரூபாய் செலவிலும் உருவாக உள்ளன.
தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் 'சங்கமித்ரா' படம் 300 கோடி ரூபாய் செலவிலும், விஜய் நடிக்கும் புதிய படம் 120 கோடி ரூபாய் செலவிலும், அஜித் நடித்து வரும் 'விவேகம்' படம் 100 கோடி ரூபாய் செலவிலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் 'ஸ்டைபர்' படம் 120 கோடி ரூபாய் செலவிலும் தயாராகி வருகின்றன.
அடுத்து மேலும் சில சரித்திரப் படங்கள், கமர்ஷியல் படங்கள் ஆகியவற்றின் பட்ஜெட்டை 100 கோடி ரூபாய் அளவிற்கு தயாரிக்க மேலும் பலர் முயற்சித்து வருகிறார்கள்.
இனி, தென்னிந்தியத் திரையுலகம் பல கோடிகளில் பட்ஜெட் தயாரிக்கும் உலகமாக மாறிவிடும். வசூலும் அப்படியே இருந்தால் சரி.