ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தூர்தர்ஷன், பாலிமர் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மோகனா. அதோடு, கோயமுத்தூரில் நடக்கும் பல்வேறு செலிபிரிட்டி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பங்கேற்று வரும் அவர், என்னை கோயமுத்தூரின் குயின் ஆங்கர் என்றுதான் அனைவரும் அழைப்பார்கள். அதோடு 2016-ம் ஆண்டின் சிறந்த தொகுப்பாளினிக்கான 2 விருதுகளை கொடுத்து என்னை கெளரவப் படுத்தியுள்ளனர் என்கிறார் மோகனா.
தினமலர் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி...
தற்போது தூர்தர்ஷனில் ஸ்டார் நைட், நம் விருந்தினர் -என்ற இரண்டு நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வருகிறேன். இதில், நம் விருந்தினர் நிகழ்ச்சியில் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சமூகத்துக்கு சேவை செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்களிடம் பேட்டி காணும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்காக 2 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் கோவையைச்சேர்ந்த ஒரு பேருந்து ஓட்டுனரை சமீபத்தில் பேட்டி கண்டேன். அதேபோல், 8-வது படிக்கும் ஒரு தமிழ் மாணவி, யோகாவிற்காக தாய்லாந்து சென்று 2 கோல்டு மெடல் வாங்கினார். இப்படி உலகத்துக்கு தெரியாமல் சாதனை செய்து கொண்டிருப்பவர்களை வெளிச்சம் போடும் நல்ல நிகழ்ச்சி இது. தவிர, பாலிமர் டிவியில் லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன்.
முக்கியமாக, கோயமுத்தூரைச்சேர்ந்த நான், அங்கு நடக்கும் பெரும்பாலான செலிபிரிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறேன். அதனால் கோயமுத்தூரில் என்னை குயின் ஆங்கர் என்றுதான் கூப்பிடுவார்கள். அதோடு, அங்குள்ள ஒரு நடன பள்ளியில் 2016ம் ஆண்டின் சிறந்த தொகுப்பாளினி விருதினை எனக்கு கொடுத்தனர். அதையடுத்து, ஈரோடு கிழக்கு மாவட்ட லயன்ஸ் கிளப்பின் 25-வது சில்வர் ஜூப்ளி விழாவிலும் எனக்கு சிறந்த தொகுப்பாளினி விருது கொடுத்தனர். இப்படி ஒரே ஆண்டில் இரண்டு விருதுகள் கிடைத்தது பெருமையாக உள்ளது.
மேலும், சின்னத்திரை மட்டுமின்றி, சினிமாவிலும் பட்டைய கிளப்பு பாண்டியா, முப்பரிமாணம், இணையதளம் உள்பட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து நல்ல பர்பாமென்ஸை வெளிப்படுத்தும் அழுத்தமான கேரக்டர்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் தொகுப்பாளினி மோகனா.