போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
கிருமி கதிர் நடித்துள்ள படம் சிகை. இந்த படத்தை ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படம் நியூயார்க் இந்தியன் திரைப்பட விழா, கேன்ஸ் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அதோடு தேசிய விருதுக்கும் அனுப்பினர். ஆனால் விருது கிடைக்கவில்லை. அடுத்தபடியாக இப்படம் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறது.
மேலும், சிகை படம் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வந்த நிலையில், தனது அடுத்த படத்தை பட்ஷி என்ற பெயரில் ஏற்கனவே தொடங்கிவிட்டார் சிகைப்பட டைரக்டரான ஜெகதீசன் சுப்பு. கதாநாயகியை மையமாகக் கொண்ட இந்த படத்தில் நயன்தாராவின் மாயா படத்தில் அவரது தோழியாக ஸ்வாதி என்ற கேரக்டரில் நடித்த லட்சுமி பிரியா நாயகியாக நடித்து வருகிறார்.
கதைப்படி, இதில் ஒரு துணிச்சலான நிருபராக நடிக்கும் லட்சுமி பிரியா இந்தியாவிலுள்ள பல மாநிலங்களுக்கும் சென்று செய்தி சேகரிப்பது போன்று நடிக்கிறாராம். அப்படி அவர் எந்தமாதிரியான செய்தி சம்பந்தமாக ஒவ்வொரு மாநிலமாக செல்கிறார் என்பதுதான் பட்ஷி படத்தின் கதையாம். இந்த படத்தையும் சிகை படத்தைப் போலவே உலகத்திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி ஒரு அங்கீகாரம் கிடைத்த பிறகே வெளியிடுகிறாராம் ஜெகதீசன் சுப்பு.