இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
1500 கோடியைத் தாண்டி வசூலித்துக் கொண்டிருக்கும் 'பாகுபலி 2' படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட வினியோகஸ்தருக்கே இதுவரை சில கோடிகள்தான் கையில் கிடைத்துள்ளதாம். படத்தின் வசூல் ரூ.2000 கோடியை நோக்கி போய் கொண்டிருக்கும் வகையில் அவர்களே சக்சஸ் மீட் கூட வைக்கவில்லை. ஆனால் 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு வந்த இரண்டு படங்களுக்கு இந்த வாரத்தில் நடைபெற்ற 'சக்சஸ் மீட்'டால் ஆடிப் போனவர்கள் நிறைய பேர்.
எவ்வளவு வேண்டுமானாலும் அடியுங்கள் நாங்கள் தாங்குவோம் என்ற ரீதியில்தான் அந்தப் படங்களை விமர்சகர்கள் கழுவிக் கழுவி ஊற்றினார்கள். இரண்டு படங்களுமே தரத்தின் அடிப்படையில் பார்த்தால் மிகவும் மோசமான படங்கள். சுமார் 5 கோடிக்கும் மேல் செலவு செய்து தயாரிக்கப்பட்ட அந்தப் படங்கள் 50 லட்சம் கூட வசூலித்திருக்காது என்று சொல்கிறார்கள். ஆனால், எதற்காக அவர்கள் 'சக்சஸ் மீட்' என்று நடத்தினார்கள் எனத் தெரியவில்லை என திரையுலக வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.
கொஞ்ச நாட்களாக காணாமல் போயிருந்த இந்த சக்சஸ் மீட் கலாச்சாரம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.